இன்று
குடையுடன் மழையில்
தனித்து நடக்கையில்
புரிகிறது
அன்று
நனைந்துக் கொண்டு
விளையாடிய படி
உன்னுடன் நடந்த
மழைக்காலத்தின்
திருப்தி.........
மழை வரும் போதெல்லாம்
தவறின்றி
தோன்றும்
உன்
ஞாபகங்கள்..
வலியோ
தனிமையோ
தவறுவதில்லை
உன்
நினைவுகள்...
குடைகள் தடுக்கும்
மழை துளிகளை
எது தடுக்கும்
உன் நினைவை
மழையின்
துளிகளால்
மண்
குழுமை!!
உன்
நினைவுகளால்
என்
மனம் வெம்மை!!