Tuesday, August 6, 2013

ஆயிரம் கேள்விகள்


என்னை விட்டுச் சென்றது ஏன் ?

என்னை எதிர்ப்பார்க்கவில்லையா ?
எனக்கு பொறுப்பெடுக்க உனக்கு பலமில்லையா ?

என்னை பார்த்த நொடியில் பிடித்ததா ?
என்னை என்றேனும் எண்ணுவாயா ?

எனக்கு ஏதேனும் இடம் உள்ளதா உன் மனதில் ?

ஆயிரம் கேள்விகள்
உன்னிடம் கேட்க

விட்டுச் சென்றுக்கெல்லாமே அம்மா !!!

என் புறக்கணிப்பிற்கான காரணத்தையும் 
என்னை விட்ட அநாதை இல்லத்திலே....

காரணத்தையேனும் பற்றிக்கொண்டு இருப்பேனே
உன்னக்காக ஏங்கும் ஒவ்வொரு நாளும்.........


  

மறதி


செல்ல சண்டையிடுகிறாய் 
உன்னை மறந்து விட்டேன் என்று 

சிணுங்கும் உன் முகம் கண்டு 
சிறு புன்னகையுடன் 
எண்ணுகிறேன்

மறந்தாலும் 
என்னை உன்னிடம் மறப்பேனன்றி 
உன்னை அல்ல என்று .....

காரணம் தெரியாவிடினும் 
என் புன்னைகை கண்டு 
விரிகிறது உன் முகம்

எனக்கே எனக்கான 
குறும்பு முறுவலுடன் !!!!!

திருட்டுத்தனம்


உன் சிறு தொடுகையிலும் 
சிலிர்த்து கூத்தாடும் 
என் மனதை 
வேலியிடவே முற்படுகிறேன்....

ஆயினும்  திருடனாய் 
எட்டித் தாவி விடுகிறாய் 

கொள்ளையிட்டு செல்கிறாய் 
ஒவ்வொரு முறையும் 
வேலியோடு
என் மனதையும்...

சொல்லி விட்டு செல்லேன் 
அடுத்த முறையேனும் 
உன் திருட்டுத்தனத்தின் யுத்தியை  

முயற்சிக்கிறேன் 
உன் திருட்டை 

இன்னும் எளிதாக்க !!!!!

இரவுக்கனவு


தூக்கமில்லா இரவினில் 
ஒரு நாள் 


நிலவின் ஒளி வீசும்  ஜன்னலில் 
மந்தகாசமான புன்னகையுடன் 
உன் முகம் 

நிஜம் எனவே புன்னகைக்கிறேன் 
உன் முகம் பார்த்து 

பொறாமையுற்ற காற்று
நினைவுகளை கலைக்கும் வரை..........

Friday, August 2, 2013

என் மனம் முட்டாளே !!


காரணங்கள் இன்றி
நீ விலகுகையில்

கூறிட இல்லை என்னிடம்
சமாதானங்கள்

துடித்திடும் என் மனதுக்கு..

விலக்கத்தின் வலியிலும்
கோபப்பட மறுக்கிறது உன்னிடம் 
என் மனம்...

தன்மானம்
ஏற்றுக் கொள்ளா விடினும் 
ஒற்றுக்கொள்ளவே வேண்டும்

உன் வரை
என் மனம் முட்டாளே !!!!