சும்மா கொஞ்ச நேரம்....
Sharing the thoughts that randomly strikes..
Friday, June 17, 2016
Tuesday, August 6, 2013
ஆயிரம் கேள்விகள்
என்னை
விட்டுச் சென்றது ஏன் ?
என்னை
எதிர்ப்பார்க்கவில்லையா ?
எனக்கு
பொறுப்பெடுக்க உனக்கு பலமில்லையா ?
என்னை
பார்த்த நொடியில் பிடித்ததா ?
என்னை என்றேனும் எண்ணுவாயா ?
எனக்கு
ஏதேனும் இடம் உள்ளதா உன் மனதில் ?
ஆயிரம்
கேள்விகள்
உன்னிடம்
கேட்க
விட்டுச்
சென்றுக்கெல்லாமே அம்மா !!!
என்
புறக்கணிப்பிற்கான காரணத்தையும்
என்னை
விட்ட அநாதை இல்லத்திலே....
காரணத்தையேனும் பற்றிக்கொண்டு இருப்பேனே
உன்னக்காக
ஏங்கும் ஒவ்வொரு நாளும்.........
திருட்டுத்தனம்
உன்
சிறு தொடுகையிலும்
சிலிர்த்து
கூத்தாடும்
என்
மனதை
வேலியிடவே
முற்படுகிறேன்....
ஆயினும்
திருடனாய்
எட்டித்
தாவி விடுகிறாய்
கொள்ளையிட்டு
செல்கிறாய்
ஒவ்வொரு
முறையும்
வேலியோடு
என்
மனதையும்...
சொல்லி
விட்டு செல்லேன்
அடுத்த
முறையேனும்
உன்
திருட்டுத்தனத்தின் யுத்தியை
முயற்சிக்கிறேன்
உன்
திருட்டை
இன்னும்
எளிதாக்க !!!!!
Friday, August 2, 2013
Wednesday, July 3, 2013
பிழை
நீ
கட்டிக்கொள்ள விழைந்த நேரங்களில்
தட்டிக் கழித்து சென்றவள்
உன்னோடு
இணைய விழைகளில்
எட்டிச் செல்வதென்ன
நண்பனே..
பிழையானது
நான் இணைய விழைந்த நேரமா?
அன்று தட்டிக் கழித்த நானா?
விடையின்றி தவிக்கிறேன்
நீ
என்னை விழைந்த
பொழுதுகளின் நினைவிலும்..
நீ
என்னை சேரும்
பொழுதின் எதிர்ப்பார்ப்பிலும் ..
Subscribe to:
Posts (Atom)





