Sunday, May 19, 2013

விருப்பம்




தேவையின்றியே 
தேவை படுகிறது
உன் அருகாமை.....

தூக்கத்திலும்
தூக்கம் கலைக்கிறது
உன் நினைவு.....

புன்னகைத்தே
புன்னகை பூக்க வைக்கிறது
உன் முகம்......

நேசித்தே
நேசம் கொள்ள வைக்கிறது
உன் மனம்.....

ஆகவே

என்
விருப்பமின்றியே
விரும்புகிறது உன்னை

என் மனம்.........

Thursday, May 16, 2013

இறுதிக் குரல்




கண்களை சுழற்றினேன்
நாற்புறமும்..

சுற்றிலும் ஓலக் குரல்கள்

என் அன்புக்குரியவர்களின்
கண்களில்
கண்ணீர் வெள்ளம்......

சொல்லத் துடிக்கிறேன்

என் எண்ணங்களை
என் ஆசைகளை

ஓய போகும்
என் வாழ்க்கையின் அவலத்தை....

முடியவில்லை

சொல்லத் துடிக்கும் வார்த்தைகள்
அடங்கியது
தொண்டை குழிக்குள்

சற்று நேரத்தில்
குழிக்குள் அடங்க போகும்
என் உயிரை போலவே...

விடைபெறுகிறேன் இறுதியாக

மெதுவாக
வாகனத்தை ஓட்டியிருக்கலாம்
என்ற வேதனையோடு.......



Wednesday, May 8, 2013

அஃறினை



எட்டிப் பிடிக்கிறேன்
கைக்கெட்டாத நிலவை..

முகர்ந்து பார்க்கிறேன்
காகித பூவை..

பேசுகிறேன்
அசையாப் பொருட்களோடு...

பைத்தியமென நினைக்க வேண்டாம் !!!

ஏமாற்றும் சூழ்நிலையில்
எவரையும் நம்ப இயலாத இந்நாளில்

தனிமையின் பாதுக்காப்பான துணை

அஃறினையான
பேசாத பொருட்களும்
எட்டாத நிலவும் மட்டுமே .... !!!




Thursday, May 2, 2013

நட்பு



ஆண்டுக்கணக்கில்
பாராது
பேசாது
இருந்த பொழுதிலும்

கடைசி நாள் பேச்சின்
தொடர்ச்சியாகவே

இன்றும்

சிறிதும் மாற்றம் இல்லை
தோழமையில்!!!!

எத்தனை காலம் ஆனபோதிலும்
எத்தனை தூரத்தில் இருந்த போதிலும்

எதிர்ப்பார்ப்புகளின்றி
அதே புரிதலோடு

என்றும்

துளிர்த்தேஇருக்கிறது
உண்மையான நட்பு...