Monday, April 29, 2013

முடிவு நேரம்


மனமில்லாத சிலருக்கு

வந்து விட்டது
தாய் பாசத்தின்
முடிவு நேரம்...

மூட்டைக்கட்டியாகி விட்டது
பொருட்களோடு
அம்மாவையும்....

இனி தேவை இல்லையாம்

தன் மூன்று வயது
குழந்தையை கவனிக்க

ஒரு ஆள்....





Friday, April 26, 2013

தோன்றாத் துணை



தன் நலத்தை விட
என் நலமே பெரிதாய்

கவலைகள் தன்னை வாட்டும் போதும்
என் மகிழ்ச்சியே முக்கியமாய்..

என் அனைத்து செயல்களிலும்
தோள் கொடுக்கும் துணையாய்..

நானிருக்கிறேன் என்று
எனக்கு  பாதுக்காப்பாய்..



திட்டினாலும்
என் நன்மைக்காய்..

என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாய்..
என் பயங்களை ஒழிப்பவராய்..
பின்னிருந்து ஆதரவளிக்கும் சக்தியாய்..


எத்தனை வயதானாலும்
என்னை கைப்பிடித்து நடத்தும் வழிக்காட்டியாய்..

என்றும் என்னோடு இருக்கும்
தோன்றாத் துணை


மறு வார்த்தையில்
அப்பா.....








Thursday, April 25, 2013

கோபம்


வார்த்தைகள் தேவையல்ல
பூக்களும் அவசியமல்ல

மன்னிப்பு கோரவும் வேண்டாம்

என் மனம் நாடுவதெல்லாம்
சிறு புன்னகை மட்டுமே

உன் கோபங்களின்
முடிவு
சுகமாய் அமைந்தால் நன்று..

அடுத்த முறையும்
ஆவலுடனே எதிர்ப்பார்ப்பேன்
உன் கோபத்தை !!

சுகமான முடிவின்
நினைவில்…..


காயம்



வலிக்கின்றது
ஒவ்வொரு முறையும்

நீ
என்னை காயப்படுத்துகையில்

சிறு விஷயங்கள்
மிக பெரிதாக

பேசும் வார்த்தைகள்
முள் தைக்க

ஏனோ மறந்து விடுகிறாய்

காயப்படுத்துவது
என்னை மட்டுமல்ல
உன்னையும் இணைத்தே என்பதை...

மெளனமாக காத்திருக்கிறேன்
வலியோடு....

என் மீதான அன்பு
உன் கோபத்தை மறைக்கும்
நிமிடத்தை எதிர்பார்த்து........




Wednesday, April 24, 2013

எச்சரிக்கை



காணி நிலமும்
தோட்டத்தில் கிணறும்
அருகே தென்னை மரமும்
கேட்ட பாரதி

நல்ல வேளையாக அறியவில்லை
இன்றைய நிலையை

முப்பது மாடி கட்டடங்களும்
வான் உயர நிற்கின்றன

ஆயினும்
நீர் ஏற்றப்படுகிறது
தண்ணீர் வண்டிகளில்

நிலத்தடி நீரின் அளவு
செல்கிறது
ஒவ்வொரு வருடமும்
ஆழமாக

இது
மனிதர்களுக்கு
பூமி தரும் எச்சரிக்கை போல

இன்னும் சில நூற்றாண்டுகளில்
உன் தலைமுறையும்

இந்த ஆழத்திற்கே
செல்லும் என்று....



Tuesday, April 23, 2013

மழலை



குள்ள வாத்தும்
ஜாக் அன்ட் ஜில்லும்

பாட்டி சுட்ட வடையும்
திருடிய காகமும்

சம்மந்தமே இல்லாத கதைகளும்

இனிக்கின்றன

கண்ணை உருட்டி
அபிநயங்களுடன்
சிறு அசைவுகளுடனான நடனத்தோடு
மழலைகள்
கூறும் போது...


Monday, April 22, 2013

முழுமை




நமக்குள்ளான உறவு
வரமா
விபத்தா

நான் அறியேன்

ஆயினும்
உன்னோடான
என் ஒவ்வொரு நிமிடமும்

சிறு தீண்டலும்
சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளும்

வெடிக்கும் சண்டைகளும்
தொடரும் இனிய சமாதானங்களும்

புரிதலும்
பகிர்தலும்
ஆறுதலும்
இம்சைகளும்

உன் சிறு அணைப்பும்
முழுமை அடைய செய்கிறது
என் வாழ்வை.....




மதம்



எம்மதமும் ஒன்றாம்
ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் பலர்

கூட்டிக் கழித்து பார்த்தால்

அனைத்து மதங்களும்
அனைத்து போதனைகளும்
அனைத்து அவதாரங்களும்

நம் தமிழ் படங்களை போல
ஒரே கதை தான்

சிலுவையில் அறையப்பட்டவரும்
கல்லால் அடிக்கப்பட்டவரும்
சொந்த நாட்டை விட்டு துரத்தப்பட்டவரும்

இறுதியில்
விட்டுச்சென்ற போதனை எல்லாம்

அன்பும் அமைதியும் தான்!!!!



தன் மதமே பெரிதென
மொழிந்து பலர்

வாழ்வின் முக்கியமானதான
மதங்கள் போற்றும்
அன்பை தொலைகின்றனர்....




Sunday, April 21, 2013

ஏமாற்றம்


தினமும்
உன்னை எதிர்ப்பார்த்து
ஏமாறுகிறேன்

ஆயினும்

நீ
வருவதெல்லாம்
கனவில் மட்டுமே

பிடித்துக்கொள்ள நினைக்கிறேன்
உன் கரங்களை
கனவில்லாவது


என்னை சுற்றிடும்
அனைத்து செயல்களும்
உன்னையே நிறுத்துகின்றது
என் நினைவின் முன்னே

நீ கொடுத்த
பொம்மைகளும்
நிறைக்கவில்லை
உன் இடத்தை

அத்தனை தூரத்தில் இருந்தும்
என்னை
பாதிக்க முடிகிறது

உன்னால் மட்டும்......

ஏமாற்றாதே
இனியும்....

என் மனம்
தவிக்கின்றது
உன் பிரிவால்.....





Wednesday, April 17, 2013

சொந்த ஊர்



ஊருக்குள் நுழையும் போதே
பற்றிக்கொள்ளும் 
உற்சாகம்

ரயிலின் ஜன்னல் வழியே தெரியும்
பழக்கமான பாலங்களும்
கோவில்களும்
நினைவுப்படுத்தும் பழைய நினைவுகளை

விடிகாலை விளக்கோடு சாலைகளும்
வறண்டிருப்பினும் அழகோடு தெரியும் ஆறும்

ரயில் தண்டவாளத்தை அடையும் முன்பே
எட்டித்தெரியும் ரயில் நிலையமும்

முழுதடைய செய்கிறது
மனதை

பெரிய நகரங்களில் 
எவ்வளவு  செல்வத்தோடு வாழ்ந்தாலும்

அடைய முடிவதில்லை

சொந்த ஊரின்
ஸ்பரிசம் தரும்
சந்தோஷத்தை....



தனிமை

தனக்கென அலங்கரிக்கப்பட்ட பெரிய அறை

விலையுயர்ந்த ஆடைகள்

அழகான வைர நகைகள்


விதவிதமான

ஆடும் ஓடும்

மொம்மைகள்


அதிநவீன கணினி விளையாட்டுகள்

பெரிய புது வகை தொலைக்காட்சி

அதில் ஓடும் சின்ரெல்லா கதை


அனைத்து வகை சாக்லெட்கள்

நினைத்தவுடன் கிடைக்கும் பொருட்கள்


எதுவும் மகிழ்விக்கவில்லை


அவ்வப்போது எட்டிப்ப்பார்க்கும் பெற்றோருடன்

வேளையாட்களின் பொறுப்பில்

வளரும்

சிறுமிக்கு!!!







Tuesday, April 16, 2013

கண்ணாடி



எனக்கு தெரியாமல் 
ஒளித்து மறைத்து
ஏதோ திட்டமிடுகிறாய்
என்னை ஆச்சரியமடைய வைக்க

உன் முகம் பார்த்தே
கண்டுபிடித்து விடுகிறேன் 

நீ செய்யும் 
கள்ளத்தனத்தை

நான் என்ன கண்ணாடியா 
குறுகுறுப்போடு கேட்கிறாய்...

ஆம் 

நீ  கண்ணாடி தான்...

எனக்கு மட்டுமேயான 
உன்னையும் என்னையும் இணைத்து
 பிரதிபலிக்கும் 
என் கண்ணாடி.!!!!




நிறங்கள்


கிளியின் மூக்கு நிறத்தில்
சிகப்பு உடை

அதில்
பொடி பொடியாக
எழுமிச்சை பழத்தின் நிறத்தில்
மஞ்சள் நிற புள்ளிகள்

வீட்டின் சுண்ணாம்பு
ஆரஞ்சு பழ நிறத்தில்

மாட்டின் கொம்புகளில்
வானின் நீலமும் கடல் பச்சையும்
என

தன் நண்பனின்
வர்ணனையை

இதழில்
சிறு புன்னகையுடன்
கேட்கிறான்

இரவின் நிறத்தை மட்டுமே
வாழ்வில் அறிந்த
பார்வையற்ற சிறுவன்...

தானே சிருஷ்டித்துக்கொண்ட
நிறங்களை 
கற்பனையில் கண்டு.......










Monday, April 15, 2013

தோல்வி


உன் பார்வைக்கும் 
என் பார்வைக்கும் 
சண்டை 

தோற்கடிக்கிறாய் என்னை 
உன் அன்பினில்..





பிரியமில்லை எனக்கு 

ஒரே நாளில் தோற்று விட 

ஏனெனில் 
என் எண்ணம் எல்லாம் 

எப்பொழுதும்
உன்னிடம் தோற்பதே ...

உணர்கிறேன் 
தோற்பதும் சுகமானதென
உன்னால் !!!!!

ஆகையினால்
தோற்கடித்துக் கொண்டே இரு என்னை
என் வாழ்வின் கடைசி நாள் வரை........