Wednesday, July 3, 2013

பிழை

நீ
கட்டிக்கொள்ள விழைந்த நேரங்களில்
தட்டிக் கழித்து சென்றவள்

உன்னோடு 
இணைய விழைகளில்
எட்டிச் செல்வதென்ன
நண்பனே..

பிழையானது
நான் இணைய விழைந்த நேரமா?
அன்று தட்டிக் கழித்த நானா?

விடையின்றி தவிக்கிறேன்

நீ 
என்னை விழைந்த 
பொழுதுகளின் நினைவிலும்..

நீ 
என்னை சேரும் 
பொழுதின் எதிர்ப்பார்ப்பிலும் ..

மழைக் கால மாலை பொழுதொன்று


மழைக் கால மாலை பொழுதொன்று  
கழிந்தது  
சுகமாக உன்னோடு ....

காரிருள் மேகங்களாய் 
சூழ்ந்திடும் 
உன் எண்ணங்கள்....

சில்லென்ற தூறல்களாய் 
சிலிர்ப்பூட்டும் 
உன் அருகாமை....

மின்னலின் ஒளிக்கு போட்டியாய்  
கள்ளத்தனம் கூத்தாடும் 
உன் பார்வை....

இடியின் முழக்கத்தின் மீறலாய்
பிரதானமான 
உன் சிரிப்பு சத்தம்....

புன்னகை நெருக்கமாக
உன் தோள் வளைவில் 
என் முகம் பதிய 
நம் ஒரு குடைக்குள் 
மழைச் சாரல்.....

இனியதொரு மழைக்காலம்
நினைக்கவும்
இனிக்கவும்
நமக்கே நமக்கான
ஒரு செல்ல மாலை பொழுதாய்......