காத்திருக்கும் என் மனம்
ஏன் இந்த உணர்வு
பயமா
உள்ளுணர்வா
எப்படி சொல்வேன்
இது
என் வாழ்வை
புரட்டி போட வல்லதா
அன்றி
மகிழ்ச்சி அலை வீச வல்லதா
பதிலில்லை என்னிடம்
சொல்ல எவருண்டு இவ்விடம்
திக்கி திணறும் இந்நிலை
தாளவில்லை உள்ளமே
விடை கூறுங்கள் எவரேனும்
காத்திருக்கும் என் மனம்..
No comments:
Post a Comment