Thursday, May 16, 2013

இறுதிக் குரல்




கண்களை சுழற்றினேன்
நாற்புறமும்..

சுற்றிலும் ஓலக் குரல்கள்

என் அன்புக்குரியவர்களின்
கண்களில்
கண்ணீர் வெள்ளம்......

சொல்லத் துடிக்கிறேன்

என் எண்ணங்களை
என் ஆசைகளை

ஓய போகும்
என் வாழ்க்கையின் அவலத்தை....

முடியவில்லை

சொல்லத் துடிக்கும் வார்த்தைகள்
அடங்கியது
தொண்டை குழிக்குள்

சற்று நேரத்தில்
குழிக்குள் அடங்க போகும்
என் உயிரை போலவே...

விடைபெறுகிறேன் இறுதியாக

மெதுவாக
வாகனத்தை ஓட்டியிருக்கலாம்
என்ற வேதனையோடு.......



No comments:

Post a Comment