உன்
சிறு தொடுகையிலும்
சிலிர்த்து
கூத்தாடும்
என்
மனதை
வேலியிடவே
முற்படுகிறேன்....
ஆயினும்
திருடனாய்
எட்டித்
தாவி விடுகிறாய்
கொள்ளையிட்டு
செல்கிறாய்
ஒவ்வொரு
முறையும்
வேலியோடு
என்
மனதையும்...
சொல்லி
விட்டு செல்லேன்
அடுத்த
முறையேனும்
உன்
திருட்டுத்தனத்தின் யுத்தியை
முயற்சிக்கிறேன்
உன்
திருட்டை
இன்னும்
எளிதாக்க !!!!!

No comments:
Post a Comment