எனக்காக நீ தேடி அலைய வேண்டாம்
அழகான நகைகளுக்கோ
வித விதமான உடைகளுக்கோ
பஞ்சடைத்த பொம்மைகளுக்கோ
வாசனை பொருட்களுக்கோ....
ஏனெனில் என் தேவைகள் அவை அல்ல
என் தேவைகள் மிகவும் சிக்கனமானது
சொல்லவா.........
காலை எழுந்ததும் என்னை நோக்கி ஒரு புன்னகை
ஏதேனும் சிறு தவறு நேர்ந்தால் புரிதலோடு ஒரு பார்வை
மனம் சோர்வுறும் வேளையில் சின்ன அணைப்பு
சண்டை இடும் போதும் காட்டும் அக்கறை
எங்கு சென்றாலும் ஏதேனும் இரண்டு நொடியில் ஒரு தொலைபேசி விசாரிப்பு
இவை அனைத்திற்கும் மேலாக
என்றென்றும் என் மேல் நம்பிக்கை
இது போதும்
வாழ்நாள் முழுமைக்கும்

No comments:
Post a Comment