ஊரெங்கும் கேட்கின்றது
மனிதாபிமானத்தின் குரல்
ஓங்குகின்றன
நியாயத்தை தேடி
உரிமையை தேடி
போராட்டங்கள்
நிகழ்கின்றன
பொது சாலைகளில்
கடற்கரையில்
ரயில் தண்டவாளங்களில்
கண்டனங்கள்
ஆயினும்
எதையும் பொருட்டாக மதியாது
தொடர்கின்றது
மனிதாபிமானத்தை தொலைத்த
ஆனால் மனித உருவில் இருக்கும்
கொடுமையளர்களின்
ஐந்தறிவு உயிர்களிடத்தினும்
கீழானவர்களின்
கீழானவர்களின்
ஒழிக்க முடியாத வன்முறை
உலகம் அழியப்போவதில்லை இயற்கையால்
ஆனால்
அழிக்கப்படத்தான் போகிறது
இத்தகைய வன்முறையாளர்களால்......
No comments:
Post a Comment