ஞாபகம் வரவில்லை
எவ்வளவு யோசித்தாலும்
உன்னை சந்தித்த வேளை
ஓட்டி பார்க்கிறேன்
என் மனதை
உன்னை நினைக்க தொடங்கிய நாளை
தேடி பார்க்கிறேன்
நீ முழுதாய் என்னை
ஆக்கிரமித்த நாளை
ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை
எந்த நிமிடம் நிகழ்ந்தது என்று
உன் மீதான ப்ரியம்
அதனால் என்ன
நிகழ்ந்தது எந்த நொடியிலாயினும்
ஒவ்வொரு நொடியும்
நிகழ்ந்து கொண்டே இருக்கிறது
சந்திப்பு

No comments:
Post a Comment