Thursday, March 28, 2013

சந்தித்த வேளை


ஞாபகம் வரவில்லை
எவ்வளவு யோசித்தாலும்
உன்னை சந்தித்த வேளை


ஓட்டி பார்க்கிறேன்
என் மனதை
உன்னை நினைக்க தொடங்கிய நாளை


தேடி பார்க்கிறேன்
நீ முழுதாய் என்னை ஆக்கிரமித்த நாளை


ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை
எந்த நிமிடம் நிகழ்ந்தது என்று
உன் மீதான ப்ரியம்



அதனால் என்ன


நிகழ்ந்தது எந்த நொடியிலாயினும்


ஒவ்வொரு நொடியும்
நிகழ்ந்து கொண்டே இருக்கிறது


சந்திப்பு 

உன் நினைவுகள் என் மனதினில்...





No comments:

Post a Comment