Thursday, March 28, 2013

நீ



கேள்விகள் கேட்கிறேன் நான்
மெளனம் காக்கிறாய் நீ


கோபம் கொள்கிறேன் நான்
புன்னகை பூக்கிறாய் நீ


விளையாட்டாய் சண்டையிடுகிறேன் நான்
ரசித்து சிரிக்கிறாய் நீ


கவலையில் இருக்கிறேன் நான்
ஆறுதலுடன் அணைக்கிறாய் நீ




வேலை செய்ய கூறுகிறேன் நான்
என்னை பார்த்து கொண்டிருப்பதே வேலை என்கிறாய் நீ


இப்படி செய்துக்கொண்டே இருந்தால்
எப்படி உன்னை காதலிப்பதை நிறுத்துவதாம்…...






 
அதற்கும் கூறுகிறாய்
நிறுத்த வேண்டாம்

இன்னும் அதிகமாக காதலி என்று........

No comments:

Post a Comment