Sunday, March 24, 2013

ஊடலும் கூடலும்




எதோ சிறு விஷயம்


என் தப்பு தான் என்று நீ குற்றம் கூற
உனது தப்பே என்று நான் வாதாட ....



நீ பொறுப்பில்லாதவள் என்று கூற
பொறுமையில்லாதவன் என நான் சாட...


அன்பில்லை உனக்கு என்க
என்னை புரிந்து கொள்ளவில்லை என்று நான் ஏங்க...


ஆரம்பமானது
அழுகையும் கோபமும் நிறைந்த போர்க்களம்








வார்த்தைகள் தடிக்க
விட்டுக்கொடுக்க மறுத்து இருவரும் வளர்க்க



முடிவில் குடிக்கொண்டது மெளனம்






தடித்த வார்த்தைகளை தாங்கிய மனது

தவித்தது உன் மெளனத்தை தாங்காமல்



சற்று பொறுத்து

சந்தித்தது இருவர் பார்வைகளும்



உன்னை மீறி உன் கரங்கள் எழ

என்னை மறந்து நான் சரணடைய



ஊடலின் காரணம் மறக்க.......



ஊடல் கூடலானது

உன் அணைப்பினில்........

No comments:

Post a Comment