தெரியவில்லை
இன்னும் எத்தனை காலங்கள்
வாழ்வோம் என்று
ஆனால்
நினைவில் என்றும் தங்குகிறது
பள்ளி நண்பர்களும்
விளையாடிய விளையாட்டுக்களும்
வகுப்பில் புரிந்த குறும்பு செயல்களும்
கட்டுபடுத்திய தூக்கமும்
வாங்கிய திட்டுக்களும்
ஒவ்வொரு தேர்விற்கும் பயந்ததும்
இரவு நேர படிப்பும்
தேர்வு கடைசி நாளின் விடுமுறை எதிர்ப்பார்ப்பும்
பள்ளி திறக்கும் நாளின் காலை புலம்பலும்
கூப்பிட்டு கொண்ட பட்ட பெயர்களும்
ஓவ்வொரு நண்பருக்கும் இருக்கும் விசேஷ சம்பவங்களும்
பிடித்த ஆசிரியர்களும் நாம் திட்டிய ஆசிரியர்களும்
பண்டிகைக்கு பத்து நாள் முந்திய உற்சாகமும்
தீபாவளி புத்தாடையும் பட்டாசு கொண்டாட்டங்களும்...
பள்ளி கலை நிகழ்ச்சிகளும்
கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகளும்
இப்படி
நாம் அறியாமல் சேர்க்க பட்டுள்ளது
சிறு வயது ஞாபகங்கள்
நம் மனதில் பொக்கிஷமாக.....


ungal padhipil ulla nilalpadangal anaithum arpudham....
ReplyDeleteநன்றி ஜெகதீஷ்
ReplyDelete