நமக்குள்ளான
உறவு
வரமா
விபத்தா
நான் அறியேன்
ஆயினும்
உன்னோடான
என் ஒவ்வொரு நிமிடமும்
சிறு தீண்டலும்
சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளும்
வெடிக்கும் சண்டைகளும்
தொடரும் இனிய
சமாதானங்களும்
புரிதலும்
பகிர்தலும்
ஆறுதலும்
இம்சைகளும்
உன் சிறு அணைப்பும்
முழுமை அடைய செய்கிறது
என் வாழ்வை.....
No comments:
Post a Comment