Sunday, April 7, 2013

உறவுகள்

முற்றத்தோடு கூடிய பெரிய வீடு
நடுவில் துளசி மாடம்
சுற்றிலும் பசுமையான தோட்டம்
 
அதட்டலோடு அன்பை காட்டும் தாத்தா
எதிர்பார்ப்பில்லாது பாசத்தை பொழியும் பாட்டி


அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்ளும் அத்தையும் மாமியும்
சண்டைகளை கண்டுக்கொள்ளாது தப்பித்துக் கொள்ளும் மாமாக்கள்
வீட்டிற்கு வரும் போதெல்லாம் கொஞ்சி போகும் சித்தி


உடன் விளையாடும் அண்ணாக்கள் அக்காக்கள்
கிண்டலுக்கு ஆளாகும் அத்தை மகன் மாமன் மகள்


சிறு விசேஷத்திற்கும்
துக்கத்திற்கும்
கைக்கொடுக்கும் நண்பர்கள்


இப்படி
அதிசயமாக
இரண்டு நாள் வருகை தந்திருக்கும் தாத்தா
தன் சிறு வயது வாழ்க்கையை
கூறுகையில்

ஏங்காமல் இருக்க இயலவில்லை

தாத்தாவின்  உறவுகளையும்
மகிழ்ச்சியான குழந்தை பருவத்தையும்
நினைத்து



இரண்டு அறை வீட்டில்
பள்ளி கதைகளை பகிரக் கூட ஆளில்லாது
பெற்றோர் வரும் வரையில்
கணினி விளையாட்டில் கழித்து
தனிமையில் இருக்கும்
சிறுவனால்....



No comments:

Post a Comment