Sunday, April 21, 2013

ஏமாற்றம்


தினமும்
உன்னை எதிர்ப்பார்த்து
ஏமாறுகிறேன்

ஆயினும்

நீ
வருவதெல்லாம்
கனவில் மட்டுமே

பிடித்துக்கொள்ள நினைக்கிறேன்
உன் கரங்களை
கனவில்லாவது


என்னை சுற்றிடும்
அனைத்து செயல்களும்
உன்னையே நிறுத்துகின்றது
என் நினைவின் முன்னே

நீ கொடுத்த
பொம்மைகளும்
நிறைக்கவில்லை
உன் இடத்தை

அத்தனை தூரத்தில் இருந்தும்
என்னை
பாதிக்க முடிகிறது

உன்னால் மட்டும்......

ஏமாற்றாதே
இனியும்....

என் மனம்
தவிக்கின்றது
உன் பிரிவால்.....





No comments:

Post a Comment