தினமும்
உன்னை எதிர்ப்பார்த்து
ஏமாறுகிறேன்
ஆயினும்
நீ
வருவதெல்லாம்
கனவில் மட்டுமே
பிடித்துக்கொள்ள நினைக்கிறேன்
உன் கரங்களை
கனவில்லாவது
என்னை சுற்றிடும்
அனைத்து செயல்களும்
உன்னையே நிறுத்துகின்றது
என் நினைவின் முன்னே
நீ கொடுத்த
பொம்மைகளும்
நிறைக்கவில்லை
உன் இடத்தை
அத்தனை தூரத்தில் இருந்தும்
என்னை
பாதிக்க முடிகிறது
உன்னால் மட்டும்......
ஏமாற்றாதே
இனியும்....
என் மனம்
தவிக்கின்றது
தவிக்கின்றது
உன் பிரிவால்.....


No comments:
Post a Comment