Thursday, April 25, 2013

காயம்



வலிக்கின்றது
ஒவ்வொரு முறையும்

நீ
என்னை காயப்படுத்துகையில்

சிறு விஷயங்கள்
மிக பெரிதாக

பேசும் வார்த்தைகள்
முள் தைக்க

ஏனோ மறந்து விடுகிறாய்

காயப்படுத்துவது
என்னை மட்டுமல்ல
உன்னையும் இணைத்தே என்பதை...

மெளனமாக காத்திருக்கிறேன்
வலியோடு....

என் மீதான அன்பு
உன் கோபத்தை மறைக்கும்
நிமிடத்தை எதிர்பார்த்து........




No comments:

Post a Comment