வலிக்கின்றது
ஒவ்வொரு முறையும்
நீ
என்னை காயப்படுத்துகையில்
சிறு விஷயங்கள்
மிக பெரிதாக
பேசும் வார்த்தைகள்
முள் தைக்க
ஏனோ மறந்து விடுகிறாய்
காயப்படுத்துவது
என்னை மட்டுமல்ல
உன்னையும் இணைத்தே என்பதை...
மெளனமாக காத்திருக்கிறேன்
வலியோடு....
என் மீதான அன்பு
உன் கோபத்தை மறைக்கும்
நிமிடத்தை எதிர்பார்த்து........

No comments:
Post a Comment