காலை எழுந்து பரபரப்பாக கிளம்பி
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து
அலுவலகத்தின்
கெடுபிடியில் நொந்து
விட்டால் போதும் என்று வீடு திரும்பி
வீட்டில்
யாரிடமும் பேச நேரமின்றி
இரவு
சாப்பாடு இன்ன பிற வேலைகளை முடித்து
ஹப்பா....
ஒரு நாள் முடிந்து விட்டது
எதற்கு ஓடுகிறோம் என்று அறியாமலேயே....
No comments:
Post a Comment