சில படங்கள் பார்க்கையில்
நமக்குள் தோன்றுகின்றது
ஒரு மகிழ்ச்சி
ஒரு சிலிர்ப்பு
காரணம் வேறுமல்ல
நாம் நினைத்து
எதிர்ப்பார்த்து
காத்திருந்து
நிஜத்தில்
நிகழாது போன
சில அழகான நிகழ்வுகள்
திரையில் நிகழுகையில்
நமக்கே நிகழ்வதாய்
பூரித்து போகிறது
எதிர்ப்பார்த்தே சலித்த நம் மனது..
No comments:
Post a Comment