Wednesday, April 24, 2013

எச்சரிக்கை



காணி நிலமும்
தோட்டத்தில் கிணறும்
அருகே தென்னை மரமும்
கேட்ட பாரதி

நல்ல வேளையாக அறியவில்லை
இன்றைய நிலையை

முப்பது மாடி கட்டடங்களும்
வான் உயர நிற்கின்றன

ஆயினும்
நீர் ஏற்றப்படுகிறது
தண்ணீர் வண்டிகளில்

நிலத்தடி நீரின் அளவு
செல்கிறது
ஒவ்வொரு வருடமும்
ஆழமாக

இது
மனிதர்களுக்கு
பூமி தரும் எச்சரிக்கை போல

இன்னும் சில நூற்றாண்டுகளில்
உன் தலைமுறையும்

இந்த ஆழத்திற்கே
செல்லும் என்று....



No comments:

Post a Comment