Friday, April 26, 2013

தோன்றாத் துணை



தன் நலத்தை விட
என் நலமே பெரிதாய்

கவலைகள் தன்னை வாட்டும் போதும்
என் மகிழ்ச்சியே முக்கியமாய்..

என் அனைத்து செயல்களிலும்
தோள் கொடுக்கும் துணையாய்..

நானிருக்கிறேன் என்று
எனக்கு  பாதுக்காப்பாய்..



திட்டினாலும்
என் நன்மைக்காய்..

என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாய்..
என் பயங்களை ஒழிப்பவராய்..
பின்னிருந்து ஆதரவளிக்கும் சக்தியாய்..


எத்தனை வயதானாலும்
என்னை கைப்பிடித்து நடத்தும் வழிக்காட்டியாய்..

என்றும் என்னோடு இருக்கும்
தோன்றாத் துணை


மறு வார்த்தையில்
அப்பா.....








No comments:

Post a Comment