ஊருக்குள் நுழையும் போதே
பற்றிக்கொள்ளும்
உற்சாகம்
ரயிலின் ஜன்னல் வழியே தெரியும்
பழக்கமான பாலங்களும்
கோவில்களும்
நினைவுப்படுத்தும் பழைய நினைவுகளை
விடிகாலை விளக்கோடு சாலைகளும்
வறண்டிருப்பினும் அழகோடு தெரியும் ஆறும்
ரயில் தண்டவாளத்தை அடையும் முன்பே
எட்டித்தெரியும் ரயில் நிலையமும்
முழுதடைய செய்கிறது
மனதை
பெரிய நகரங்களில்
எவ்வளவு செல்வத்தோடு வாழ்ந்தாலும்
அடைய முடிவதில்லை
சொந்த ஊரின்
ஸ்பரிசம் தரும்
சந்தோஷத்தை....

No comments:
Post a Comment