Wednesday, April 17, 2013

சொந்த ஊர்



ஊருக்குள் நுழையும் போதே
பற்றிக்கொள்ளும் 
உற்சாகம்

ரயிலின் ஜன்னல் வழியே தெரியும்
பழக்கமான பாலங்களும்
கோவில்களும்
நினைவுப்படுத்தும் பழைய நினைவுகளை

விடிகாலை விளக்கோடு சாலைகளும்
வறண்டிருப்பினும் அழகோடு தெரியும் ஆறும்

ரயில் தண்டவாளத்தை அடையும் முன்பே
எட்டித்தெரியும் ரயில் நிலையமும்

முழுதடைய செய்கிறது
மனதை

பெரிய நகரங்களில் 
எவ்வளவு  செல்வத்தோடு வாழ்ந்தாலும்

அடைய முடிவதில்லை

சொந்த ஊரின்
ஸ்பரிசம் தரும்
சந்தோஷத்தை....



No comments:

Post a Comment